பங்களாதேஷ் சுற்றுப்பயணம் சென்று இந்திய அணி விளையாடி வருகிறது. டாக்கா வில் இன்று இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மெஹிதி ஹசன் மிராஸ் 100 (83) ரன்களும், மஹ்முதுல்லாஹ் 77 (96) ரன்களும் எடுத்தனர். இந்திய அணி சார்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்கள் எடுத்து பங்களாதேஷ் அணியிடம் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
தொடரையும் பங்களாதேஷ் அணி கைப்பற்றியுள்ளது.
Visits: 4