கத்தாரில் நடைபெற்றுவரும் பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் 32 அணிகள் விளையாடி வருகின்றன. குரூப் சி யில் உள்ள தரவரிசையில் 3 வது இடத்தில் உள்ள அர்ஜென்டினா அணியும், 51 வது இடத்தில் உள்ள சவுதி அரேபியா அணியும் மோதின.
அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி முதல் பாதி ஆட்டத்தின் 10 வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். தொடர்ந்து கோல் அடிக்க முயற்சித்த அர்ஜென்டினா வீரர்களுக்கு சவுதி அரேபியா அணி கடுமையான நெருக்கடி கொடுத்தது. முதல் பாதி ஆட்டத்தில் 1-0 என்ற கணக்கில் அர்ஜென்டினா அணி முன்னிலை வகித்தது.
இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் சவுதி அரேபியா அணியில் 48 வது நிமிடத்தில் சலே அல்ஷேரி ஒரு கோலும் , 53 வது நிமிடத்தில் சேலம் அல்தாவ்சாரி ஒரு கோலும் அடித்து ஆட்டத்தின் போக்கை 1-2 என்ற கணக்கில் மாற்றினர்.
இரண்டாம்பாதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி கோல் அடிக்க முயற்சித்தும் முடியவில்லை.
இறுதியில் சவுதி அரேபியா அணி 2-1 என்ற கணக்கில் அர்ஜென்டினா அணியை வென்று சாதனை படைத்துள்ளது.
இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் சவுதி அரசு இன்று பொது விடுமுறை அறிவித்துள்ளது.
Views: 3