கத்தாரில் நடைபெற்றுவரும் பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் 32 நாடுகள் விளையாடி வருகின்றன. குரூப் எ யில் இடம்பெற்ற நெதர்லாந்து அணியும், செனகல் அணியும் மோதின.
முதல் பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் எந்த கோலும் அடிக்கவில்லை. இரண்டாம் பாதி ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை சேர்ந்த கோடி காக்போ, டேவி கிளாசென் இருவரும் ஆளுக்கு ஒரு கோல் அடித்து அணியை 2-0 கணக்கில் வெற்றி பெற வைத்தனர்.
Visits: 7