Fri. Apr 19th, 2024

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் தூத்துக்குடி அருகேயுள்ள வான் தீவின் நிலப்பரப்பு குறைந்து வருவதைத் தடுக்க சுமார் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட அலைத்தடுப்புச் சுவர் பணியையும், வனத்துறை மூலம் வான்தீவுப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளையும் இன்று ஆய்வு செய்தார்.

மேலும் அந்தப் பகுதிகளில் பராமரிக்கப்பட்டு வரும் பனைமரக் கன்றுகளையும், பாதுகாக்கப்பட்ட பவளப்பாறைகளையும் பார்வையிட்டார். இந்த முயற்சிகள் கடல் அரிப்பிலிருந்து தீவுகளை மீட்க ஒட்டுமொத்த இந்தியாவிற்கே வழிகாட்டுகிறது என கூறினார்.

Visits: 8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *