Thu. Mar 28th, 2024

மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கை ” தமிழகத்தில் பாஜக , இந்து முன்னணி , ஆர்எஸ்எஸ் அமைப்புகளைச் சேர்ந்தோரின் வீடுகள் , வாகனங்கள் மீதான பெட்ரோல் குண்டு வீச்சு , தீவைப்புச் சம்பவங்கள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன . ஒரே நாளில் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன . இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான போலீஸார் மற்றும் அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளது மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது .

இந்தச் சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம நபர்களில் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை . ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள யாரும் இதுபோன்ற வன்முறையைப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க மாட்டார்கள் . இத்தகு சம்பவங்கள் மிகப்பெரிய அளவில் கலவரங்களைத் தூண்டிவிடக்கூடிய அபாயம் மிக்கவை .

மக்கள் நீதி மய்யம் பாஜக ரசிகர்கள் அல்லர் . ஆனால் ஜனநாயகத்தின் தொண்டர்கள் . அரசியல் மக்களுக்கானது . வன்முறையால் அதை வெல்ல முற்படுவது மிருக குணம் . மிருக குணம் கொண்டோர் எவராயினும் அவர்கள் நாட்டில் திரியவேண்டியவர்கள் அல்ல .

நாங்கள் வன்முறையை கைக்கொள்ளும் எத்தரப்பிற்கும் எதிரானவர்கள் . எதிர்வரும் காந்தி ஜெயந்தியை ரத்தத்தால் கொண்டாடலாம் என நினைப்பவர்களை மக்கள் நீதி மய்யமும் , நானும் வன்மையாக எதிர்க்கிறோம் .

எந்தச் சூழ்நிலையிலும் தமிழக மண்ணில் வன்முறைக் கலாச்சாரத்தை அனுமதிக்க மாட்டோம் . அமைதிப் பூங்கா என்று பெயரெடுத்த தமிழகத்தை , வெடிகுண்டு கலவர கலாச்சாரத்துக்கு மாற்ற முயல்வோரை இரும்புக் கரம் கொண்டு அடக்கி , சட்டம் – ஒழுங்கையும் , அமைதியையும் பாதுகாக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தமிழக அரசையும் , காவல் துறையையும் வலியுறுத்துகிறது . “

Visits: 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *