Sat. May 11th, 2024

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சிபிஐஎம் சு.வெங்கடேசன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “மதுரை மற்றும் தென்மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் முக்கியமானது புதிய தொழில்நுட்ப பூங்கா மதுரையில் அமைக்கப்பட வேண்டும் என்பது . இதற்காக ஜனவரி 19 ஆம் தேதி தலைமை செயலகத்தில் மாண்புமிகு தமிழக முதல்வரை நானும் எங்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்களும் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தோம் .

இன்றைய தினம் மதுரையில் நடைபெற்ற ” தோள் கொடுப்போம் தொழில்களுக்கு ” தெற்கு மண்டல மாநாட்டில் விழா பேருரையாற்றிய மாண்புமிகு முதல்வர் அவர்கள் டைடல் மற்றும் மதுரை மாநகராட்சி இணைந்து புதிய டைடல் பார்க் அமைக்கப்படும் . மாட்டுத்தாவணி பகுதியில் இரண்டு கட்டமாக 10 ஏக்கரில் பூங்கா அமையும் .

முதல் கட்டமாக ரூ .600 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் . இதன் மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும் என்று அறிவித்துள்ளார் .

மதுரை மற்றும் தென்மாவட்ட வளர்ச்சிக்கு மிகப்பெரும் பங்காற்றும் அறிவிப்பு இது .

மதுரை மக்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு உருவம் கொடுத்துள்ள தமிழக முதல்வருக்கு மதுரை மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் . இந்த தகவல்தொழில்நுட்ப பூங்கா தென் தமிழகத்தில் தகவல்தொழில் நுட்ப வளர்ச்சியின் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கான வித்து .

இந்த ஆண்டு ஜூன் 8 ஆம் தேதி மதுரை வந்து கொட்டாம்பட்டியில் தங்கிய முதல்வரிடம் “ மதுரையில் சிறு , குறு தொழில் கூட்டமைப்பின் கான்கிளேவ் ” நடத்தவேண்டும் என்றும் கோரியிருந்தேன் . ஏற்றுக்கொண்ட முதல்வர் அவர்கள் இன்று அந்த கூட்டத்தில் கலந்துகொண்டு ” தகவல் தொழில்நுட்ப பூங்காவிற்கான ” அறிவிப்பை வெளியிட்டுயிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி . வாழ்த்துகிறோம் முதல்வரே “

Views: 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *