பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி அவர்களின் அறிக்கை ” பாட்டாளி மக்களின் வாழ்க்கையை உயர்த்துவதற்கான போராட்டத்தில் தங்களின் இன்னுயிரை ஈந்த 21 தியாகிகளுக்கும் இன்று 35-ஆவது நினைவு நாள். அவர்கள் செய்த ஈடு இணையற்ற தியாகத்திற்காக அவர்களை இந்த நாளில் மட்டுமின்றி எந்நாளும் வணங்குகிறேன்… போற்றுகிறேன்!
பாட்டாளி மக்கள் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் முன்னேற வேண்டும் என்பது தான் இட ஒதுக்கீட்டு போராட்ட தியாகிகள் இன்னுயிர் ஈந்ததன் நோக்கம். அந்த நோக்கத்தை நிறைவேற்ற மருத்துவர் அய்யா அவர்களின் வழியில் நாம் அனைவரும் உழைப்போம்…. வெற்றி பெறுவோம்! “
Visits: 3