Tue. Apr 16th, 2024

திருச்செந்தூர் முருகப்பெருமான் கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு கட்டுப்பாடுகள் இருக்கின்றன. நூறு ரூபாய் கட்டணம் தரிசனம் மற்றும் பொது தரிசனம் இரண்டு வழியில் மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். 60 வயது கடந்த முதியவர்கள் சுவாமி தரிசனத்துக்குச் செல்ல தனி பாதை அமைக்கப்பட்டிருக்கிறது.

கட்டண மற்றும் பொது தரிசனம் மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். கோயில் அர்ச்சகர் ஒருவர் சுவாமி தரிசனம் வந்த பக்தர்கள் சிலரிடம் பணம் பெற்றுக் கொண்டு மூத்த குடிமக்கள் செல்லும் வரிசையில் அழைத்துச் சென்றிருக்கிறார்.

அந்த வரிசையின் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் அந்த அர்ச்சகரை தடுத்து நிறுத்தி இருக்கிறார். இதனால் கோபம் அடைந்த அச்சகர்கள் சில கும்பலாக சேர்ந்து போலீஸ்காரருடன் வாக்குவாதம் செய்து அவரை அடித்து தள்ளியதாகக் கூறப்படுகிறது.

திருக்கோயில் அதிகாரிகள் இது சம்பந்தமாக விசாரணை செய்து வருகிறோம் என தெரிவித்தனர்.

திருச்செந்தூர் கோயிலில் பல ஆண்டுகளாக அர்ச்சகர்கள் பணம் பெற்றுக்கொண்டு குறுக்கு வழியில் பக்தர்களை தரிசனம் செய்ய வைப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.

Visits: 8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *