Thu. May 16th, 2024

முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை ” நேற்று ( 1.8.2022 ) மாலை 5 மணியளவில் , சோளிங்கர் அரக்கோணம் சாலை , SR கண்டிகை மின்னலம்மாள் கோவில் எதிரே சாலையோரம் நின்றிருந்த புதூர் கண்டிகையைச் சேர்ந்த சீனிவாசன் ( வயது 45 ) மற்றும் அங்கு சாலையில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த SR கண்டிகை கிராமத்தை சேர்ந்த உண்ணாமலை ( வயது 45 ) , கன்னியப்பன் ( வயது 65 ) ஆகியோர் மீது அவ்வழியாக சென்ற கார் எதிர்பாராத விதமாக மோதியதில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன் . உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் , ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் . இந்த விபத்தில் உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கும் தலா ரூபாய் இரண்டு இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் . “

Views: 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *