தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கை ” பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பும் அதன் துணை அமைப்புகளும் சட்டவிரோதமானவை என்று அறிவித்து அவற்றை 5 ஆண்டுகளுக்கு இந்தியாவில் செயல்பட தடை விதித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
கடந்த 22 ஆம் தேதி நாடு முழுவதும் அதன் அலுவலகங்களில் NIA வால் சோதனை நடத்தப்பட்டிருந்த நிலையில் இந்த முடிவானது பாசிச பாரதிய ஜனதா ஆட்சியின் திட்டங்களும்,சட்டங்களும், மக்களையும்,மக்களுக்காக போராடும் அமைப்புகளையும் ஒடுக்குவதற்காகவே பயன்படுத்தப்படுகிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மீதான தடையை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிப்பதோடு அதனை உடனடியாக நீக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்.”
Visits: 8