Tue. Apr 30th, 2024

சுங்கடி சேலைகளுக்கு ஜனவரி முதல் 12 சதவிகித GST வரி . இவ்வரிவிதிப்பை கைவிட ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம் சு.வெங்கடேசன் எம்.பி நேரில் வலியுறுத்தல் .

“” சுங்கடி சாரீஸ் ” மதுரையின் அடையாளங்களில் ஒன்று . மொழிச் சிறுபான்மையினராக உள்ள சௌராஷ்டிரா சமூத்தைச் சார்ந்த மக்கள் இத் தொழிலில் பராம்பரியமாக ஈடுபட்டு வருகிறார்கள் . கைகட்டு வடிவமைப்பு , மெழுகு பிரிண்ட் வடிவமைப்பு , ஸ்கீரின் பிரிண்ட் வடிவமைப்பு , சாயமிடுதல் மற்றும் சலவை செய்தல் போன்ற பணிகள் இத்தொழிலில் உள்ளடக்கம் . 10,000 குடும்பங்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளன .

விவசாய கூலிப்பெண்கள் , மீனவப்பெண்கள் உள்ளிட்ட அடித்தட்டு மக்கள் அணியும் உடையான இச்சுங்குடி சாரீஸ் தயாரிக்கும் தொழில் 1995 – ல் குடிசைத் தொழிலாக அங்கிகரிக்கப்பட்டுள்ளது . சிறப்பான , நேர்த்தியான இச்சேலைகளுக்கு ” புவிசார் குறியீடும் ” 2005 – ல் வழங்கி ஒன்றிய அரசு கௌரவித்துள்ளது .

இத்தகு பெருமை வாய்ந்த சுங்குடி சாரீஸ் தயாரிக்கும் தொழில் ஒன்றிய அரசின் வரி விதிப்புக் கொள்கையால் பாதிப்பிற்கு உள்ளாக உள்ளது .

முற்றிலும் வரி விலக்கு அளிக்க வேண்டிய இத்தொழிலுக்கு 2017 – ம் ஆண்டு 5 % வரி விதித்தது ஒன்றிய அரசு . தற்பொழுது 12 % ஆக உயர்த்தி ஜனவரி 1 ம் தேதி முதல் அமலாகும் என்று ஆணை பிறப்பித்துள்ளது ஒன்றிய அரசு .

எளிய மக்களை பாதிக்கும் இவ்வரி உயர்வை உடனடியாக கைவிட வேண்டும் என ஒன்றிய அரசின் நிதியமைச்சரிடம் நேரில் வலியுறுத்தினேன்.” – மதுரை CPIM எம்.பி சு.வெங்கடேசன் .

Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *