Tue. Apr 30th, 2024

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூரில் உள்ள சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கான கட்டண விலக்கு சம்மந்தமாக அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்தது. மேலும் சுங்கச்சாவடியினர் சாலை ஆக்கிரமித்து உள்ளதாக உள்ளுர் மக்கள் நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவர்கள் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி சுங்கச்சாவடி முன் போராட்டத்தில் ஈடுபட்டார். காவல்துறையிடம் எந்த அனுமதியும் பெறாமலே போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆர்.பி.உதயகுமாரை கைது செய்தனர்.

ஆர்.பி.உதயகுமார் அமைச்சர் ஆக இருந்தபோதும் கப்பலூர் சுங்கச்சாவடி இயங்கிக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Visits: 11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *