நாமக்கல் அடுத்த பொம்மைக்குட்டை மேட்டில் திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. இதில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா “பிரிவினை வேண்டும், தனித்தமிழ்நாடு வேண்டும். இளைஞர்களே முன் வாருங்கள். பேட்ஜ் குத்திக் கொள்ளுங்கள். சுதந்திர தமிழ்நாடு தான் நம்முடைய கடைசி தீர்வு’ என்று பெரியார் சொன்னார். பெரியாரை முழுமையாக ஏற்றுக்கொண்ட நாங்கள் அதிலிருந்து விலகி, ஜனநாயகத்திற்காக இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக எங்கள் தந்தையையும் ஒதுக்கிவிட்டு இந்தியா வாழ்க என்று சொன்னோம். சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
அமித்ஷாவுக்கு சொல்கிறேன், பிரதமருக்கு சொல்கிறேன். உங்களைப் பணிந்து கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன். இந்த மேடையில் எங்கள் தலைவரை வைத்துக்கொண்டு சொல்கிறேன். அண்ணா வழியில் பயணம் செய்கிறார் முதலமைச்சர், எங்களை பெரியார் வழிக்கு தள்ளி விடாதீர்கள். தனிநாடு கேட்க எங்களை விட்டு விடாதீர்கள். மாநில சுயாட்சி தாருங்கள். அதுவரை நாங்கள் ஓய மாட்டோம்” என்று பேசி உள்ளார்.
Views: 7