தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிட 2,15,67,122 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்வாழ் இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கிடும் அடையாளமாக 10 குடும்பங்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்
மேலும் அவர் கூறியதாவது “நாமெல்லாம் ஓரினம் – தமிழினம் என்கிற உயரிய சமத்துவ எண்ணம் மிளிர உழவுக்கும் அதற்குத் துணைநிற்கும் கதிரவனுக்கும் கால்நடைகளுக்கும் வணக்கம் செலுத்திடும் தமிழர் திருநாளாம் பொங்கலைத் தமிழக மக்கள் மகிழ்வுடன் கொண்டாடச் சிறப்புப் பரிசுத் தொகுப்பு வழங்குவதைத் தொடங்கி வைத்தேன்.”
Visits: 2