நடைபெற்றுவரும் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் 42 வது ஆட்டத்தில் சூப்பர் 12 குரூப் 2ல் இடம்பெற்ற இந்திய அணியும் ஜிம்பாப்வே அணியும் இன்று மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் ராகுல் அதிரடியாக விளையாடி 51 ரன்கள் அடித்து அவுட் ஆனார். அவருடன் களமிறங்கிய கேப்டன் ரோஹித் சர்மா 15 ரன்களில் அவுட் ஆக பின்வந்த விராத் கோஹ்லி, சூர்யகுமார்யாதவ் இணை அதிரடியாக விளையாடியது. கோஹ்லி 26 (25) ரன்களில் அவுட் ஆக சூர்யகுமார்யாதவ் 61 (25) அடித்து கடைசிவரை களத்தில் நின்றார்.
இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் எடுத்தது. ஜிம்பாப்வே தரப்பில் சீன் வில்லியம்ஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி வீரர்கள் இந்திய அணியின் துல்லியமான பந்துவீச்சில் ஒவ்வொருவராக நடையை கட்டினார். 17.2 ஓவர்களிலே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.
இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோதவுள்ளது.
Visits: 4