Thu. Mar 28th, 2024

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளரும் , தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ .பன்னீர்செல்வம் அவர்களின் அறிக்கை ” தமிழ்நாட்டின் தென்கோடியில் பிறந்து , தன் முயற்சியாலும் , கடின உழைப்பாலும் , அறிவுக் கூர்மையாலும் உன்னத மனிதராக விளங்கியவரும் ; மிகச் சிறந்த தேசியவாதியும் ; எளிமை , அடக்கம் , அறிவு , நேர்மை ஆகிய நான்கு பண்புகளுக்கு சொந்தக்காரரும் ; இந்தியத் திருநாட்டின் இணையற்ற அறிவியல் அறிஞரும் ; இந்திய மக்களின் உள்ளங்களில் , குறிப்பாக இளைஞர்களின் உள்ளங்களில் இன்றளவிலும் குடிகொண்டு இருப்பவரும் ; ‘ பாரத ரத்னா ‘ உள்பட பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரரும் , இந்தியத் திருநாட்டின் குடியரசுத் தலைவராக பதவி வகித்தவரும் , ‘ மக்கள் ஜனாதிபதி ‘ என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்டவருமான டாக்டர் A.P.J. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளான இன்று அவருக்கு எனது வணக்கத்தினையும் , மரியாதையையும் செலுத்துகிறேன் . அவரது புகழும் , அவரது அர்ப்பணிப்பு உணர்வும் , அவரது கண்டுபிடிப்புகளும் , அவரது தியாகமும் என்றென்றும் இப்புவியில் நிலைத்து நிற்கும் . இந்திய நாடு வல்லரசாக ஆக வேண்டும் என்ற அவரது குறிக்கோளினை எய்த நாம் அனைவரும் இந்த நாளில் உறுதி ஏற்போம் . “

Visits: 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *