Thu. Mar 28th, 2024

Tag: #இந்தி

பாஜக ஒருபக்கம் இந்திக்கு ஆதரவாகவும், இன்னொரு பக்கம் ஆங்கிலத்திற்கு எதிராகவும் நடத்துகிற இரட்டை வேடத்தை தமிழக மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள் – கே.எஸ்.அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழக மக்களின் நலனிற்கு எதிராகவும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு குந்தகம் ஏற்படுத்துகின்ற வகையிலும் மத்திய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது. ஆனால், இதை மூடி மறைக்கின்ற வகையில் தமிழக…

பல தேசிய இனங்கள் வாழும் இந்திய ஒன்றியத்தில் இந்தி எனும் ஒற்றை மொழியின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முற்பட்டால், தமிழர் நிலத்தில் மீண்டுமொரு மொழிப்போர் வெடிக்கும்! – சீமான்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் ஒன்றிய அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக வெளியிட்ட கண்டன அறிக்கை “ஓன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக்குழு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவிடம் அளித்துள்ள 11வது அறிக்கையில் இந்தியைத்…

இந்தியைத் திணிக்க தொடர் முயற்சி! நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும், அரசியல் சட்டத்துக்கும் எதிரானது! ஒன்றிய அரசுக்கு மநீம கண்டனம்

ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்து மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் A.G.மௌரியா, I.P.S.,(ஓய்வு) அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” மத்திய பாஜக அரசு வெவ்வேறு வழிகளில் இந்தியைத் திணிக்க தொடர்ந்து முயற்சித்து வருவது கண்டனத்திற்குரியது. அடிப்படைத் தேவைகளைத் தீர்க்காமல், பிரச்சினைகளைத்…

இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தியை திணிக்க முயற்சிக்கும் அமித்ஷா அவர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். – கே எஸ் அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் கூறியதாவது ” பா.ஜ.க. ஆட்சியில் இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தியை திணிக்கிற முயற்சியின் வெளிப்பாடாகத் தான் அலுவல் மொழி பற்றிய நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரை அமைந்துள்ளது. இந்த முயற்சிகளை தீவிரப்படுத்துகிற பணியில் ஈடுபட்டுள்ள…

இந்திக்குத் தாய்ப்பாலும், இந்தியாவின் மற்ற மொழிகளுக்குக் கள்ளிப் பாலும் புகட்ட நினைப்பது, இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது. – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை ” தலைவர் திரௌபதி முர்மு அவர்களிடம் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழு அளித்துள்ள அறிக்கையில் இந்திய ஒன்றியத்தின் ஒற்றுமைக்கு பேராபத்தை விளைவித்திடும் பரிந்துரைகள்…

SSC CGL தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. – கனிமொழி எம்.பி

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி அவர்களின் ஒன்றிய அரசுக்கு எதிரான கண்டன அறிக்கை ” பணியாளர் தேர்வாணையத்தால், ஒன்றிய அரசின் துறைசார் பணியிடங்களுக்கு நடத்தப்படும் CGL தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்திருப்பது…

இந்தி தெரியாதவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என கூறிய பாஜக அமைச்சர் சஞ்சய் நிஷாத்க்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம்

மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கை “இந்தி தெரியாதவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உ.பி அமைச்சர் சஞ்சய் நிஷாத் பேசியுள்ளார். இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் இவரைப் போன்ற பொறுப்பற்றவர்களின் பதவிகள் பறிக்கப்படவேண்டும். மொழிப்பிரிவினையை தூண்டி பொது அமைதியை…

அமித்ஷா க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி வரவேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கண்டன அறிக்கை “ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள்” என்று ஒன்றிய உள்துறை அமைச்சர்அமித்ஷா சொல்வது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல்! இந்தியாவின் பன்முகத்தன்மையைப்…

இணைப்பு மொழியாக இருக்க வேண்டுமானால், அந்தத் தகுதி நாட்டின் பழமையான மொழியான தமிழுக்கு தான் உண்டு – பாமக ராமதாஸ்

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “மாநிலங்களுக்கு இடையிலான தொடர்பு மொழியாக இந்திய மொழியான இந்தி தான் இருக்க வேண்டும்; ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி வர வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.…

“ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள்! நீ தேடி வந்த கோழையுள்ள நாடிதல்லவே!” என முழங்கி மொழிப்போர் தியாகிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

மொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி, சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள் மணி மண்டபத்தில், தமிழ் மொழி காக்க இன்னுயிர் நீத்த தியாகிகளை நினைவுகூறும் வகையில் அவர்களது திருவுருவப் படங்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மரியாதை செலுத்தினார்.…