Mon. Dec 4th, 2023

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர் பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது “காவிரி நதிநீரை திறந்து விடாமல் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், இதனை கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்க்கும் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் வருகிற 27.09.2023 (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம், அண்ணா சிலை அருகில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. கழக பொருளாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெறும் போராட்டத்தில் கழகத்தை சேர்ந்த அனைத்து நிர்வாகிகளும் மற்றும் பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு உண்ணாவிரத போராட்டத்தை வெற்றிபெற செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.”

Hits: 11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *