ரகசியங்களை பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன இந்திய விஞ்ஞானியை மராட்டிய பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
மராட்டிய மாநிலம் 9 புனேயில் உள்ள மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (டி.ஆர்.டி.ஓ) மூத்த விஞ்ஞானியாக இருப்பவர் பிரதீப் குருல்கர். இவர்ராணுவ ரகசியங்களை செல்போன் மூலம் மர்மநபரிடம் பகிர்ந்து வருவதாக டி.ஆர்.டி.ஓ. ஊழியர் ஒருவர் மராட்டிய மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.அப்போது விஞ்ஞானி நாட்டின் பாதுகாப்பு ரகசியங்களை பாகிஸ்தானை சேர்ந்த உளவு அமைப்பின் ஏஜெண்டுக்கு கசிய விட்டது தெரியவந்தது. இதையடுத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அவரை அதிரடியாக கைது செய்து உள்ளனர்.
Hits: 3