தமிழக வாழ்வுரிமைகள் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கை “உலகளவில் ஊடக சுதந்திரக் குறியீட்டில் 180 நாடுகளின் பட்டியலில், கடந்த 2021 ஆம் ஆண்டில் 142-வது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு 150-வது இடத்திற்கு சென்றிருக்கிறது.
அதனை மெய்பிக்கும் வகையில், சர்வதேச அளவில் பிரபலமான பிபிசி ஊடக நிறுவனத்துக்கு இந்தியாவின் டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் அலுவலகங்கள் அமைந்துள்ளன. இந்த அலுவலகங்களில், இன்று வருமான வரித்துறை ஆய்வு மேற்கொண்டுள்ளது.
பிபிசி நிறுவனம் வெளியிட்ட ஆவணப்படம் ஒன்று இந்தியாவில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது கோத்ரா கலவரத்தில் மோடி மீதான குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்க்கும் வகையிலான கருத்துக்கள் இந்த ஆவணப்படத்தில் இருந்தன.
இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஆர்.எஸ்.எஸ், பாஜகவின் அரசியல் குறித்தும்,மனித உரிமைகளை நசுக்கும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் பிபிசி நிறுவனம் அம்பலப்படுத்தியது.
இதனால் ஆத்திரமடைந்த பாஜக, தனது அதிகார திமிரை பயன்படுத்தி, அதனை வெளியிடுவதற்கு தடை செய்தது.
பிபிசி நிறுவனத்தை அச்சுறுத்தி, பணிய வைக்க,அந்நிறுவனத்தின் மீது வருமான வரித்துறையை ஏவி விட்டுள்ளது.
பாசிஸ்டுகளைப் பொறுத்தவரை தங்களுக்கு எதிரான கருத்துக்களை எதிர்கொள்ளத் துணிவற்றவர்கள் மட்டுமல்ல, அதை அடக்கி ஒடுக்கி இல்லாமல் செய்வதற்கும் முயலும் சர்வாதிகார எண்ணம் படைத்தவர்கள் ஆவர்”
Hits: 1