Fri. Mar 29th, 2024

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது “புதுச்சேரியில் மின்துறையை தனியார்மயமாக்கக் கூடாது என வலியுறுத்தி, மின்துறை ஊழியர்கள், தொழிலாளர்கள், அரசியல் கட்சிகள், அரசியல் இயக்கங்கள் தொடர்ச்சியாக போராடியும்,வலியுறுத்தியும் வருகின்றன.

கடந்த இரண்டரை ஆண்டுகளாக மின்துறை தனியார்மயமாக்கம் கூடாது என்று வலியுறுத்தி, மின்துறை ஊழியர்கள், தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்கள் ஏராளம்

இவ்விவகாரத்தில்,புதுச்சேரி முதல்வர்,அமைச்சர்களும், மின்துறை தனியார் மயமாகாது என்று கூறிக்கொண்டே,தனியார் மயமாக்கும் பணியை வேகப்படுத்தியுள்ளனர்.

இதன் வாயிலாக, 100 விழுக்காடு பங்குகளையும் தனியாரிடம் கொடுக்க முடிவு செய்துள்ளனர். அவ்வாறு செய்தால் ஒட்டுமொத்த மின்துறையும், அதில் பணி‌புரியும் ஊழியர்களும் தனியாரிடம் வேலை செய்யும் சூழல் ஏற்படும். மின்துறை ஊழியர்கள் அரசு‌ ஊழியர்களாக நீடிக்க மாட்டார்கள்.

மின்துறை ஊழியர்களின் சலுகைகள் அனைத்தும் பறிக்கப்படும்.தனியார் நிறுவனத்தில் பணிபுரிகின்ற நிலைதான் ஊழியர்களுக்கு ஏற்படும்.
இதனையெல்லாம் கருத்தில் கொள்ளாமல்,பிரீபெய்டு மின்மீட்டர் பொருத்தும் திட்ட ஒப்பந்தம் அமைச்சர் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது

இந்த அபாயங்களை பொருட்படுத்தாமல், மின்துறையை தனியார் மயமாக்கும் முயற்சியில் புதுச்சேரி அரசு ஈடுபட்டால், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என தெரிவித்துக் கொள்கிறேன்.

Visits: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *