காங்கிரஸ் கட்சியை சேர்ந்த செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “ஒவ்வொரு நாள் விடியும் போதும் தமிழ்நாட்டில் எங்காவது ஒரு உயிர் ஆன்லைன் ரம்மியால் பறிபோகின்றது. இன்று திருநெல்வேலியில் பணகுடி அருகே சிவன்ராஜ் என்ற இளைஞர் உயிரை குடித்திருக்கிறது. இந்த உயிர்பலிக்கும் ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும்.
அனைவரும் விரும்பம் இளம்வயது பருவத்தில் பல உயிர்களை இந்த கொலைகார விளையாட்டு அநியாயமாக பறிக்கின்றது.
இந்த விளையாட்டுக்கு தடை கொடுக்கும் சட்டமசோதாவிற்கு ஒப்புதல் கொடுக்காமல் ஆன்லைன் ரம்மி விளையாட்டின் தொழிலதிபர்களுக்கு ஆளுநர் துணை போகிறாரோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் நலனுக்காக இயற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருக்கும் ஆளுநருக்கு வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலத்தின் நலனுக்கு எதிராக உள்ள ஆளுநரை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும். “
Visits: 14