தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழ்நாடு மாண்புமிகு முதல்வர் அவர்கள், சட்டப்பேரவையில் உரையாற்றிக் கொண்டு இருக்கும் போதே அவை மரபுகளை மீறி, பாதியிலேயே ஆளுநர் வெளியேறி, பேரவையையும், அமைச்சர்களையும், உறுப்பினர்களையும், ஆளுநர் அவமதித்திருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது.
சமூக நீ்தி,சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி சமத்துவம், பெண்ணுரிமை,மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல், பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா,முத்தமிழறிஞர் கலைஞர்,திராவிட மாடல் ஆட்சி,தமிழ்நாடு அமைதிப் பூங்கா உள்ளிட்ட வார்த்தைகளை வாசிக்கவில்லை.
இவற்றை வாசிக்க ஆளுநருக்கு விருப்பமில்லை என்றால், சட்டப்பேரவையை விட்டு மட்டுமின்றி,தமிழ்நாட்டை விட்டே வெளியேறலாம்.
தமிழ்நாட்டு மக்கள் ஆட்சியில் அமர வைத்த ஓர் அரசை,இம்மணுக்கான அரசியல் தெரியாதவர் இழிவுப்படுத்தியிருப்பது, ஒட்டுமொத்த தமிழர்களையும் கொச்சைப்படுத்தியதை போன்று தான்.”
Visits: 7