தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் நிறுவனர் & தலைவர், பெ.ஜான்பாண்டியன். எம்.ஏ., அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழ்நாடு என்ற பெயரை தமிழகம் என மாற்ற வேண்டுமென்று தமிழ்நாடு ஆளுநர் திரு.R.N.ரவி அவர்கள் கூறியது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. தமிழர்களுக்கு என தனித்த அடையாளம் கொண்டது தான் “தமிழ்நாடு”.
1950 ஆம் ஆண்டு விடுதலைப் போராட்ட வீரர் சங்கரலிங்கனார் அவர்கள் பல போராட்டங்களை முன்னெடுத்து, மெட்ராஸ் மாகாணத்தை மொழி வாரியாக கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களாக பிரித்து “தமிழ்நாடு” என பெயர் சூட்டப்பட்டது.
தமிழ்நாட்டு கலாச்சாரத்தையும் , பண்பாட்டையும் மற்றும் வரலாற்று பின்னனியும் கூறுவதே தமிழ்நாடு என்று பொருள். இதன் முழு உண்மையும் ஆளுநர் அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று கூறிக்கொள்கிறேன்.”
Visits: 12