Tue. Mar 19th, 2024

சென்னை : மக்கள் நீதி மய்யம், பொறியாளர் அணி – மாநில செயலாளர் டாக்டர் S.வைத்தீஸ்வரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “சென்னை-திருச்சி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் 2018 ஜனவரி முதல் கடந்த ஜூன் மாதம் வரையிலான 4 ஆண்டுகளில் நேரிட்ட விபத்துகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளியான தகவல் பெரிதும் அதிர்ச்சி அளிக்கிறது.

சாலை விபத்துகளுக்கு வாகன ஒட்டிகள் மட்டுமின்றி, போதுமான அளவுக்கு பயன்பாட்டுச் சாலைகள் இல்லாததும், சாலை வடிவமைப்பில் உள்ள குளறுபடிகளும்தான் காரணம். தினமும் 1.40 லட்சம் பயணிகள் வாகனம் செல்லும் இந்த சாலையில், தேவையான இடங்களில் அணுகு சாலைகளோ, இலகுரக வாகனங்கள் செல்ல தனி வழியோ இல்லை.

குறிப்பாக, தாம்பரம்-உளுந்தூர்பேட்டை சாலை கொலைக்களமாகவே மாறியுள்ளது. சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டாலும், சரிவர பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதில்லை. உயிர்ப் பலிகளைத் தடுக்க, உடனடியாக சாலையைச் சீரமைப்பதுடன், பயன்பாட்டுச் சாலைகள், சுரங்கப் பாதைகள் அமைக்க வேண்டியது அவசியமாகும்.”

Visits: 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *