Tue. Mar 19th, 2024

கத்தாரில் நடைபெற்றுவரும் பிபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் 32 நாடுகள் விளையாடி வருகின்றன. குரூப் A ல் இடம்பெற்ற ஈகுவடார் அணியும் செனகல் அணியும் மோதின.

முதல் பாதி ஆட்டத்தில் செனகல் அணி வீரர் இஸ்மாயிலா சார் 44 வது நிமிடத்தில் கோல் அடித்தார்.இதன் மூலம் செனகல் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் ஈகுவடார் அணி வீரர் 67 வது நிமிடத்தில் மொய்சஸ் கெய்சிடோ கோல் அடித்து அசத்தினார். பதிலடியாக செனகல் அணியில் 70 வது நிமிடத்தில் கலிடோ கௌலிபாலி கோல் அடித்தார்.

இறுதியில் செனகல் அணி 2-1 என்ற கணக்கில் ஈகுவடார் அணியை வென்றது.

Visits: 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *