கத்தாரில் நடைபெற்றுவரும் பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் 32 அணிகள் விளையாடி வருகின்றன. குரூப் A யில் உள்ள நெதர்லாந்து அணியும், ஈகுவடார் அணியும் மோதின.
முதல் பாதி ஆட்டத்தில் நெதர்லாந்து அணியின் கோடி காக்போ 6 வது நிமிடத்தில் கோல் அடித்து அணியை 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற வைத்தார்.
இரண்டாம் பாதி ஆட்டத்தில் ஈகுவடார் அணியில் 49 வது நிமிடத்தில் என்னர் வலென்சியா கோல் அடித்து ஆட்டத்தின் போக்கை 1-1 என்ற கணக்கில் சமமாக்கினார்.
முடிவில் 1-1 என்ற கணக்கில் ஆட்டம் சமனில் முடிந்தது.
Visits: 3