Fri. Mar 29th, 2024

கத்தார்: கால்பந்து உலகக்கோப்பை கத்தாரில் நேற்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. மொத்தம் 32 நாடுகள் பங்கேற்றுள்ளன.

முதல் போட்டியில் குரூப் எ வில் 50 வது இடத்தில் உள்ள கத்தார் அணியும், 44 வது இடத்தில் உள்ள ஈகுவடார் அணியும் AI பேட் ஸ்டேடியத்தில் மோதின. ஆட்டம் தொடக்கம் முதல் பரபரப்பாக வீரர்கள் விளையாடினர். ஈகுவடார் அணியில் 16 வது நிமிடத்தில் என்னர் வலென்சியா பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றினார். 31 வது நிமிடத்திலும் வலென்சியா கோல் அடித்து முதல் பாதி 2-0 என்ற கணக்கில் ஈகுவடார் முன்னனியில் இருந்தது.

இரண்டாம்பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயற்சித்து அவர்களால் அடிக்க முடியவில்லை. முதல் பாதி ஆட்டத்தின் 2-0 கணக்கில் ஈகுவடார் அணி வெற்றி பெற்றது.

Visits: 8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *