Fri. Dec 1st, 2023

சென்னை : சி.பி.ஐ(எம்) மாநிலக்குழு‌ தீர்மானம் வெளியிட்டுள்ளது. தீர்மானத்தில் கூறியதாவது “பாஜக அல்லாத மாநில அரசாங்கங்களின் அதிகாரத்திலும், நிர்வாகத்திலும் ஆளுநர்கள் மூலமாக தலையீடு செய்வதும், சர்ச்சைகளை உருவாக்குவதும் மோடி அரசின் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. தமிழகமும் அதற்கு விதிவிலக்கல்ல.

தமிழக ஆளுநர் ரவி அவர்கள் அரசியல் சாசனத்துக்கு முரண்பட்டும், அவருடைய பொறுப்புக்கு ஒவ்வாத வகையிலும், அத்துமீறியும் தொடர்ந்து பேசி வருகிறார்.

பல்வேறு முக்கிய பிரச்சனைகளில் தமிழகத்தின் நிலைப்பாட்டை மறுதலித்து ஒன்றிய அரசின் குரலாக ஒலித்து வருகிறார். தமிழக சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பும் சட்ட வரைவுகளை முடக்கி வைக்கிறார். தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் அதனைக் கடுமையாக விமர்சனம் செய்து வந்ததோடு, இனி பொறுப்பதற்கில்லை என்ற சூழலில் குடியரசுத் தலைவர் தமிழக ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என்கிற கோரிக்கையை எழுப்பியுள்ளனர்.

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உடனடியாக தமிழக ஆளுநரை திரும்பப் பெற குடியரசுத் தலைவர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென சிபிஐ (எம்) மாநிலக்குழு வலியுறுத்துகிறது.”

Hits: 0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *