Thu. Apr 25th, 2024

சென்னை : பத்திரிகையாளர்கள் தினத்தை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிட்ட அறிக்கை “ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் தேசிய பத்திரிகையாளர்கள் தின நல் வாழ்த்துகள். மக்களின் குரலாய் ஒலிக்கும் பத்திரிகையாளர்களுக்கு நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் ஆதரவுக் குரல் கொடுப்பதில் மக்கள் நீதி மய்யம் என்றும் முன்னணியில் நிற்கும்.

ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் பணியில், பல்வேறு நெருக்கடிகளையும், அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளும் ஊடகவியலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பது அவசியம். இதற்கான முன்னெடுப்புகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டுமென மநீம வலியுறுத்துகிறது.”

Visits: 10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *