விசிக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” குஜராத்தில் மோர்பி நகரில் உள்ள தொங்கு பாலம் உடைந்து ஏற்பட்ட விபத்தில் 140 பேருக்குமேல் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. 19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அந்த பாலம் 7 மாதங்களாக சீரமைப்பு பணிகள் நடந்து கடந்த வாரம்தான் மீண்டும் திறக்கப்பட்டது.
தனியார் நிறுவனம் ஒன்றிடம் அந்த பராமரிப்புப் பணிகளை குஜராத் மாநில பாஜக அரசு கொடுத்துள்ளது.
பாலத்தின் உறுதியை சோதித்து நகராட்சி நிர்வாகம் சான்று அளிப்பதற்கு முன்பே மக்கள் பயன்பாட்டுக்கு அது திறந்துவிடப் பட்டுள்ளது.
பாதுகாப்பற்ற நிலையில் பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவிட உத்தரவிட்டது யாராக இருந்தாலும் இந்த விபத்துக்கு குஜராத் மாநில பாஜக அரசே பொறுப்பேற்கவேண்டும்.
மேற்கு வங்கத்தில் 2016 இல் இதுபோல ஒரு விபத்து ஏற்பட்டபோது அந்த மாநில அரசுக்கு எதிரான கடவுளின் செய்தி அது என வர்ணித்த மாண்புமிகு பிரதமர் அவர்கள் இதற்கு என்ன விளக்கம் அளிக்கப்போகிறார்?”
Visits: 7