Fri. Mar 29th, 2024

நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் 30 வது ஆட்டத்தில் சூப்பர் 12 க்ரூப் 2 ல் இடம்பெற்ற இந்தியா அணியும் தென்னாப்பிரிக்கா அணியும் மோதின. டாஸ் வென்ற இந்தியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணி தொடக்க வீரர்கள் சொதப்ப சூர்யகுமார்யாதவ் அதிரடியால் 20 ஒவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் எடுத்தது.இந்திய அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார்யாதவ் 68 (4) ரன்கள் எடுத்தார். தென்னாப்பிரிக்கா அணியில் லுங்கி என்கிடி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 19.4 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக டேவிட் மில்லர் 59 (46) ரன்களும், ஐடன் மார்க்ராம் 52 (41) ரன்களும் எடுத்திருந்தனர்.

Visits: 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *