Thu. Mar 28th, 2024

ராஜஸ்தான் மாநிலத்தில் பெற்றோரால் வாங்கப்பட்ட கடன் திருப்பி செலுத்தப்படாத நிலையில் அதற்கு பதிலாக வீட்டில் உள்ள இளம்பெண்களை விற்கும் கொடூரமான செயல் நடந்து வருவதாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ராஜஸ்தான் அரசுக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் ஒரு மாத காலத்திற்குள் காவல்துறை விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இது ஒரு அருவருக்கத்தக்க நடைமுறை என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கிராமப்புறங்களில் வீட்டில் ஒருவர் கடுமையான நோய்வாய்ப்பட்டால் மருத்துவ சிகிச்சைக்காக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை அந்த குடும்பத்திற்கு உள்ளது.

பில்வாராவை சுற்றியுள்ள சில மாவட்டங்களில் கடன் கொடுத்தவர் கடனை வசூலிக்க அந்த ஊர் சாதி பஞ்சாயத்துகள் அல்லது சாதி சங்கங்கள் மூலம் புகார் செய்கின்றனர்.

பஞ்சாயத்துகள் கடனுக்கு பதிலாக கடன் வாங்கியவர் தனது வீட்டில் உள்ள இளம்பெண்ணையோ அல்லது கடனுக்கு ஏற்றவாறு மேலும் வீட்டில் உள்ளவர்களையோ ஒப்படைக்க வேண்டும். மேலும் கடன் அளித்தவர் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த பொண்ணை யாருக்கு வேண்டுமானாலும் விற்கலாம்.

மேலும் கடன் வாங்கியவர் தனது மகளை விற்க மறுத்தால் அவர்களின் தாய்மார்கள் கற்பழிக்கப்படுவார்கள் இதன் மூலம் பஞ்சாயத்து தீர்க்கப்படுவதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

Visits: 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *