Thu. Apr 25th, 2024

கோடியக்கரை அருகே வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் வீரவேல் என்ற மீனவர் படுகாயம் அடைந்தார்.

மீனவர்களின் படகை நிறுத்தும்படி கடற்படையினர் விளக்குகள் மூலம் சைகை காட்டியதாகவும், அதன்பிறகும் சம்பந்தப்பட்ட படகு நிற்காததால் தான் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கடற்படை தரப்பில்கூறப்பட்டது.

துப்பாக்கி சூட்டில் காயமடைந்த மீனவருக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியா கடற்படை மீது வேதாரண்யம் கடலோர காவல் குழும காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Visits: 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *