Thu. Mar 28th, 2024

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “ஒரே நாடு, ஒரே உணவு, ஒரே வரி என்ற வகையில் தற்பொழுது ஒரே மொழி என்ற ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கையை நடைமுறைப்படுத்த பாசிச மோடி அரசு திட்டமிட்டுள்ளது.

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு, மத்தியப் பல்கலைக் கழகங்கள் உட்பட அனைத்து தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழி கட்டாயமாக இந்தியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

அதுமட்டுமின்றி, வேலைவாய்ப்பு தேர்வுகளில் இந்தி மொழி அவசியம், பணியாளர்கள் தேர்விலும் இந்தி மொழி அறிவு கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை குடியரசு தலைவரிடம் அளித்துள்ளது.

இந்தியாவில் வாழும் பல்வேறு இனக்குழுக்களின் மொழிகளை மறைத்துவிட்டு, அழித்துவிட்டு இந்திதான், நாட்டின் தாய்மொழி என்பது போன்ற ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்க, ஆர்.எஸ்.எஸ் வகையாறாக்கள் முடிவெடுத்துள்ளனர். அவர்களின் முடிவு, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு எதிரானது.”

Visits: 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *