இயக்குனர் மணிரத்னம் அவர்கள் பொன்னியின் செல்வன் நாவலை இரண்டு பாகமாக திரைப்படம் எடுத்துள்ளார். திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சோபிதா துலிபா, பிரபு, ஆர் சரத்குமார், விக்ரம் பிரபு, ஜெயராம், பிரகாஷ் ராஜ், ரஹ்மான் மற்றும் ஆர் பார்த்திபன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் & மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்து உள்ளது.
பொன்னியின் செல்வன் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது. படக்குழு இன்று அதிகாரபூர்வமாக வசூல் 400 கோடியை தாண்டியதாக அறிவித்துள்ளது.
Visits: 4