Fri. Mar 29th, 2024

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “இலங்கை போர்க்குற்றங்கள் மீதான நடவடிக்கைகள் குறித்த தீர்மானத்தை ஐநா மனித உரிமைப் பேரவை இன்று நிறைவேற்றியுள்ளது. தீர்மானத்துக்கு ஆதரவாக 20 நாடுகளும் எதிராக 7 நாடுகளும் வாக்களித்துள்ளன. இந்தியா உள்ளிட்ட 20 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்காமல் புறக்கணித்து விட்டன.

இலங்கைக்கு எதிரான இந்தத் தீர்மானத்தை இந்தியா கண்டிப்பாக ஆதரித்து வாக்களித்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யத் தவறியது தமிழர்களிடையே வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. தீர்மானத்தை ஆதரித்த அனைத்து நாடுகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.”

Visits: 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *