ஹரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தை சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் கொடுத்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண் கூறியுள்ள புகாரனது ” கடந்த ஜூலை 27ம் தேதி வயலுக்கு சென்ற இவரை காரில் வந்த நபர்கள் துப்பாக்கி முனையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு கடத்தி சென்றுள்ளனர். அங்கு அவர்கள் இந்த பெண்ணை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். இதே போல் 36 நாட்கள் அந்த பெண்ணை தொடர்ச்சியாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்தியுள்ளனர். பின்னர் அந்த பெண்ணிடம் எடுத்த தவறான வீடியோவை இணையதளத்தில் வெளியிடாமல் இருக்க 3 லட்சம் கேட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் குடும்பத்தினர் பணத்தை குடுத்து பெண்ணை மீட்டுள்ளனர்.” என அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. குறிப்பாக வடமாநிலங்களில் இந்த குற்றங்கள் அதிகரித்துள்ளன.
Visits: 9