கடந்த 11ஆம் தேதி வடசென்னை பகுதியில் தமிழக முதலமைச்சர் அவதூறாக சித்தரிக்கும் வழியில் போலி பத்திரிக்கை பெயரில் சுவரொட்டிகள் தயாரிக்கப்பட்டு சுவரில் ஒட்டப்பட்டு இருந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மாநகராட்சி மண்டலம் ஐந்தின் உதவி பொறியாளர் ராஜ்குமார், துறைமுகம் கிழக்கு பகுதி செயலாளர் ராஜசேகர் என்பவரும் காவல்துறையில் புகாரளித்திருந்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு விசாரணை மேற்கொண்டதில் போஸ்டர் ஒட்டும் வேலை செய்யும் பிலிப்ஸ் ராஜை கைது செய்தனர். பிலிப்ஸ் ராஜ் மீது கொலை வழக்கு ஓன்று உள்ளது. இந்து ஜனநாயக முன்னணியின் சென்னை மாநகர செயலாளர் சத்யநாதன் என்பவரும், பறையர் பேரியக்க தலைவர் சிவகுருநாதன் என்பவரும் இன்று கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் விசாரணை செய்யப்பட்டபோது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் முருகன் போஸ்டர் டிசைன் மற்றும் 35000 கொடுத்தது தெரிய வந்தது. தலைமறைவாக இருந்த கிருஷ்ணகுமார் முருகன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Visits: 32