புதிய தமிழக கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் பெரியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்ட செய்தி “பெரியாரின் தத்துவம் – கொள்கைகள் முழுக்க பொருள்முதல் வாதத்தை அடிப்படையாகக் கொண்டதோ அல்லது கருத்தியல் வாதத்தை அடிப்படையாகக் கொண்டதோ அல்ல, இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையை மேற்கொண்டு அவர் சமூக சீர்திருத்தவாதியாக தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டவர்.
தமிழகத்தில் அவரது கருத்துக்கள் நிகழ்த்தி இருக்கக்கூடிய மாற்றங்களை எவராலும் முழுமையாக நிராகரித்து விட முடியாது. அவர் ஓர் துணிச்சல் மிக்க மாமனிதர். அவரது 144-வது பிறந்தநாளில் புதிய தமிழகம் கட்சி அவரை நினைவு கூறுகிறது. “
Visits: 5