Fri. Mar 29th, 2024

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகன் கவாஸ்கர் விராட் கோலி பற்றி கூறியதாவது ” விராட் கோலி தொடக்க களம் இறங்குவது சிறந்த தேர்வாக இருக்கும் என நான் கருதுகிறேன். அவரது சராசரி மற்றும் ஸ்ட்ரைக்ரேட் போன்றவை அதனை தெளிவாக விவரிக்கிறது.

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க அவர் விரும்புவதாக சொல்லி தான் எனக்கு ஞாபகம் உள்ளது. அது இந்திய அணிக்கு உதவும். அதேபோல் மூன்றாவது வீரராக சூர்யாகுமார் யாதவ் களமிறங்க வேண்டும். அது நடக்க வேண்டும் எனில் ராகுல் அதற்கு தனது இடத்தை தியாகம் செய்ய வேண்டி உள்ளது. கோலி யாருக்கு எதிராக சென்சுரி பதிவு செய்தார் என்பது முக்கியமல்ல அவர் பதிவு செய்துள்ளது சர்வதேச சதம் என்பது மட்டும் நாம் கவனிக்க வேண்டும். மீண்டும் அவர் ரன் மெஷினாக மாறுவது அணிக்கு சாதகமாக இருக்கும்.” என கூறியுள்ளார்

Visits: 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *