Tue. Apr 16th, 2024

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது .இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் மோதிய முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்பின் நடந்த ஹாங்காங் அணியுடன் வெற்றி, பாகிஸ்தான் , இலங்கை அணிகளுடன் விளையாடி தோல்வியை தழுவி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேறியது.

இந்திய அணி ஆசிய கோப்பை போட்டியில் இருந்து வெளியேறியதற்கு முன்னாள் எம்பி சுப்ரமணியசாமி டிவிட்டரில் டுவிட் ஒன்றை போட்டுள்ளார். அதில் ” ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ஏற்பாட்டாளர்கள் யார் என்றும் நாம் ஏன் மோசமாக வீழ்த்தப்பட்டோம்? கிரிக்கெட் சூதாட்டமா? அப்பாவியாக கேட்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

பாஜக முன்னாள் எம்.பி சுப்ரமணியன் சுவாமி எம்.பி உள்துறை அமைச்சர் அமித்ஷா மகன் ஜெய்ஷா மீது பெயரை குறிப்பிடாமல் விமர்சனத்தை வைத்துள்ளார். ஆசிய கிரிக்கெட் கவுன்சின் தலைவராக இருப்பவர் ஜெய்ஷா பிசிசிஐ செயலாளராக இருக்கும் இவர் தான் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஏற்பாடுகளை முன் நின்று செய்தார்.

Visits: 10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *