தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் அறிக்கை ” ஐடிஐயில் பயிற்சி பெற்றுச் செல்லும் பயிற்சியாளர்கள் தொழில் முனைவோர்களாக, வெளி நாடுகளுக்கு வேலைவாய்ப்புக்கு செல்பவர்களாக,பொதுத்துறை, அரசுத்துறை மற்றும் தனியார்துறைகளில் சிறந்த தொழிலாளர்களாக பணிபுரியலாம்.
ஆனால், தற்போது அந்த நோக்கத்தை சிதைக்கும் வகையிலும், எந்த நிபுணத்துவமும் இல்லாமல் வெறும் சொல்வதைச்செய்யும் கூலித் தொழிலாளியாக மட்டுமே பணிபுரியும் வகையிலும், புதிய தொழிற்கல்வி முறையை அமல்படுத்த ஒன்றிய அரசு முயன்று வருகிறது.
எனவே, புதிய தொழிற்கல்வி முறையை தடுத்து நிறுத்தவதோடு, தொழிற்பயிற்சித் துறையின் நோக்கத்தை முழுமையாக அமல்படுத்தி, தமிழ்நாடு தொழிற் துறையில் மேலும் வளர்ந்திடவும் வாய்ப்பு உருவாக்கிடவும், இத்துறையின் பயிற்சி மேம்படவும் தமிழ்நாடு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். “
Visits: 2