தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” சங்க கால துறைமுக பட்டணமான கொற்கையில் கடல் சார் முன் கள ஆய்வுகளைத் தமிழ் நாடு அரசின் தொல்லியல் துறையின் சார்பில் மேற்கொள்ளும் பொருட்டு, இந்திய கடலாய்வு பல்கலைக் கழகம் மற்றும் தேசிய கடல் சார் தொழில் நுட்ப நிறுவனம் ஆகியோருடன் இணைந்து, தூத்துக்குடிக்கும் திருச்செந்தூருக்கும் இடையேயான கடல் பகுதியில் ஆய்வுக்கப்பல் நேற்று தன் கடலாய்வுப் பணியினைத் தொடங்கியது . தமிழ் நாட்டின் தொல்லியல் வரலாற்றில் இது ஒரு மைல் கல்லாகும். ” என தெரிவித்துள்ளார்.
Visits: 2