தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது ” கடந்த ஆண்டு அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு, ஆயுள் தண்டனை கைதிகள் 700 பேரை, மனிதநேய அடிப்படையில் தமிழ்நாடு அரசு விடுதலை செய்திருந்தது. வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி, அறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.
கடந்த ஆண்டை போன்று இந்தாண்டும், நீண்ட காலமாக சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.
குறிப்பாக, ராஜீவ் கொலை வழக்கில், 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள எஞ்சிய 6 தமிழர்களையும், 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் இசுலாமிய சகோதரர்களையும் விடுதலை செய்ய வேண்டும். ” என குறிப்பிட்டுள்ளார்.
Visits: 11