Thu. Apr 25th, 2024

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் ) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” தமிழ்நாட்டில் உள்ள 28 சுங்கச் சாவடிகளில் 01.09.2022 முதல் 15 சதவீத கட்டண உயர்வை அமலாக்க ஒன்றிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது . ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதத்தில் 22 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது . அப்போதே . இந்த கட்டண உயர்வுக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தன . ஆனாலும் , மக்கள் மீது கொஞ்சமும் அக்கறையற்ற ஒன்றிய அரசு , கட்டண உயர்வை அனைத்து சுங்கச் சாவடிகளுக்கும் விரிவாக்கியுள்ளது . இது வன்மையான கண்டனத்துக்குரியதாகும் .

வரலாறு காணாத பண வீக்கத்தை நாடு எதிர்கொள்கிறது . மொத்த விலை பணவீக்கம் காரணமாக சிறு குறுந்தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன . சில்லரை பணவீக்கம் எளிய மக்களை பதம்பார்க்கிறது . நாட்டின் பொருளாதார வளர்ச்சி தேக்கநிலையை நோக்கி வேகமாக சரிந்துவருகி இந்த நிலைமைகளை சீராக்க , அரசு செலவினத்தை அதிகப்படுத்த வேண்டும் . மக்களின் வருமானத்தை உயர்த்த வேண்டும் . அதன் மூலம் வாங்கும் சக்தியை அதிகரிக்க வேண்டும் . ஆனால் . பாதிக்கப்பட்ட மக்களுக்கே அபராதம் போடும் விதமாகத்தான் ஒன்றிய அரசின் செயல்பாடுகள் உள்ளன . உணவுப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி .. ரயில் டிக்கெட் வாங்கினாலும் , ரத்துச் செய்தாலும் கூட ஜி.எஸ்.டி. என்று கட்டணக் கொள்ளை அன்றாடம் அதிகரிக்கிறது . ஏற்கனவே . பெட்ரோல் , டீசல் . சமையல் வரிவாயுவின் விலை உயர்வு சாமானிய மக்களை கடுமையாக பாதித்துள்ளது . தற்போது சுங்க கட்டண உயர்வும் வெகுமக்கள் தலையிலேயே சுமத்தப்படும் .

குறிப்பாக திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடியில் பேருந்துகளுக்கான சுங்கக் கட்டணம் ரூ . 185 வரை உயர்த்தப்படுகிறது . லாரிக்கான கட்டணம் ரூ .300 வரை உயர்த்தப்படுகிறது . அனைத்து சுங்கச் சாவடிகளிலுமே 15 சதவீத கட்டண உயர்வு விதிக்கப்பட்டுள்ளது . இதனால் சரக்கு போக்குவரத்து நேரடியாக பாதிக்கப்படும் . அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயரும் . பொதுப் போக்குவரத்தும் சீரழியும் .

மேலும் , ஒவ்வொரு ஆண்டும் சுங்கச்சாவடி கட்டண உயர்வு இருக்கும் என்ற கொள்கை மிக மிக அபத்தமான ஒன்றாகும் . எனவே . ஒன்றிய அரசாங்கம் தற்போதைய கட்டண உயர்வை திரும்பப் பெற்றுக் கொள்வதுடன் , ஒவ்வொரு ஆண்டும் கட்டணத்தை உயர்த்தும் நடவடிக்கையை கைவிட வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் ) -யின் மாநில செயற்குழு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது .

வாகன உரிமையாளர்கள் இதற்கு எதிராக கண்டன குரல் எழுப்பவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் ) கேட்டுக் கொள்கிறது . “

Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *