சிபிஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் அறிக்கை ” இந்திய வங்கிகள் இதுவரை ரூ.10 லட்சம் கோடிகளுக்கும் அதிகமான தொகையை வராக்கடனாக தள்ளுபடி செய்துள்ளன.
இதில் 42 நிறுவனங்களுக்கு மட்டும் ரூ. 3,53,655 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதை வங்கி ஊழியர்கள் சங்கம் வெளிப்படுத்தியது.
ஒரு நிறுவனம் வாங்கிய கடனில் 99% அளவுக்கு தள்ளுபடி செய்திருக்கிறார்கள். யார் இந்த நிறுவனங்கள்? எதற்காக தள்ளுபடி?
அதானி நிறுவனம் தன்னுடைய புதிய முதலீடுகளை வங்கிக் கடனை நம்பியே மேற்கொள்வதாக சமீபத்திய ஆய்வு சொல்கிறது. அதற்கான தைரியம் எங்கேயிருந்து வந்தது?
வங்கிகளை சுரண்டும் நிறுவனங்களின் பட்டியல் வெளியிட்டால் குட்டு உடைந்துவிடும். கள்ளக் கூட்டு முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வரும். “
Visits: 15