Thu. Apr 18th, 2024

பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தர்ராஜன் அவர்களை அறிக்கை ” ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதி வழியில் போராடிய மக்கள் மீது காவக்துறை கட்டவிழ்த்த வன்முறையும் துப்பாக்கிச்சூடும் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையால் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.இந்த விசராணை அறிக்கை தொடர்பாக ப்ரண்ட்லைன் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிக்கிறது.

காவலர் சுடலைக்கண்ணு என்பவர் மட்டும் 17 ரவுண்ட் பொதுமக்களை குறிவைத்து சுட்டுள்ளார். அடியாள் போல் சுடலைக்கண்ணு செயல்பட்டதாகவும்,மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள்ளாகவே மறைந்திருந்து மக்களை சுட்டுதள்ளியுள்ளது காவல்துறை.
இந்த அளவிற்கு திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலையில் அந்த நேரத்தில் தூத்துக்குடியில் பணியாற்றிய அதிகாரிகளை மட்டும் காரணமாக்குவது போதாது.

காவல்துறையின் வன்முறை வெறியாட்டும் நடந்தபோது முதலமைச்சராகவும் உள்துறைக்கு பொறுப்பாகவும் இருந்த எடப்பாடி பழனிசாமி ,தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி திரிபாதி ஆகியோரையும் உரிய விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்க வேண்டும்.

ஸ்டெர்லைட் நிறுவனத்திற்காக தமிழ்மக்களை சுட்டுக்கொல்லும் அயோக்கயதனத்தை சுடலைக்கண்ணு மட்டும் நிச்சயமாக எடுத்துஇருக்கமாட்டார், எனவே அன்றைய முதல்வர் உள்ளிட்டவர்களை விசாரணைக்கு உட்படுத்தி தண்டிப்பதே உயிர்நீத்த மக்களுக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாகும். “

Visits: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *