மதுரை : இந்திய நாட்டின் ராணுவத்தில் பணிபுரிந்த தமிழ்நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் லக்ஷ்மணன் தீவிரவாதிகள் தாக்குதலில் வீர மரணம் அடைந்தார். இந்நிலையில் அவரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்ல இன்று மதுரை விமானநிலையத்திற்கு வந்ததடைந்தது.
அவருக்கு அஞ்சலி செலுத்த அரசு சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விமானநிலையத்திற்கு வந்தார். அவர் அரசு சார்பில் ராணுவவீரர்க்கு அஞ்சலி செலுத்திவிட்டு காரில் கிளம்பிய பொது அவரது காரை பாஜகவினர் வழிமறித்து தாக்க முயன்றனர். மேலும் அவர் கார் மீது செருப்பு வீசி அராஜகத்தில் ஈடுபட்டனர் . அங்கிருந்த காவலர்கள் காரை மீட்டு நிதியமைச்சரை வழியனுப்பி வைத்தனர்.
Visits: 12