பீகார் மாநிலத்தில் 2020 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது.
தேர்தலுக்கு முன் ஏற்பட்ட ஒப்பந்தப்படி ஜேடியு தலைவர் நிதீஷ்குமார் முதல்வராக பதவி ஏற்றார். அந்த தேர்தலில் பாஜக 77, ஜே டி யு 45 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. அமைச்சரவையில் 16 இடங்கள் பாஜகவுக்கு கொடுக்கப்பட்டிருந்தது.
ஆட்சி அமைத்ததிலிருந்து பாஜகவுக்கும் நிதிஷ்குமாருக்கும் கருத்து வேறுபாடுகள் வளர்ந்து வந்தது. இந்நிலையில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்து தனது முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார்.
ஐக்கிய ஜனதா தலைவர் நிதிஷ்குமார் ஆர்ஜேடி தலைவர் லல்லு வீட்டிற்கு சென்று மெகா கூட்டணியை அறிவித்தார். அந்த மெகா கூட்டணியில் ஜேடியு, ஆர்ஜேடி, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளன. நிதிஷ்குமார் முதல்வராகவும், தேஜஸ்வியாதவ் துணை முதல்வராகவும் பதவியேற்க உள்ளனர். கூட்டணி கட்சிகளுக்கான அமைச்சரவை இடங்களும் ஒதுக்கப்பட்டு விட்டது.
Visits: 4